Press "Enter" to skip to content

அக்‌ஷய் குமாரை தொடர்ந்து கோவிந்தா… பாலிவுட்டை அச்சுறுத்தும் கொரோனா

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதால், அங்கு இருப்பவர்களை பலரையும் அச்சுறுத்தி வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. பொது நிகழ்வுகளில் பங்கேற்கும் பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். 

அவ்வகையில், பாலிவுட் ஜாம்பவான் அக்சய் குமாருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு பாலிவுட்டின் முன்னணி நடிகர்களாக இருக்கும் அமீர்கான், மாதவன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »