Press "Enter" to skip to content

ரசிகருக்கு பதிலடி கொடுத்த கிருஷ்ணா

கொரோனா வைரஸ் பற்றி சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட கிருஷ்ணா, ரசிகரின் கேள்விக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் தற்போது உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவாமல் இருப்பதற்கு, பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. கல்விக் கூடங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றையும் மார்ச் 31-ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

பலரும் வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். திரைத்துறையினர் படப்பிடிப்புகளை நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் நடிகர் கிருஷ்ணா தனது டிவிட்டர் பக்கத்தில், ‘கொரோனா வைரஸை யாரும் ஈசியாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பொது இடங்களுக்கு செல்வதை முடிந்த வரை தடுக்கவும்” என்று கூறினார். 

இதை பார்த்துவிட்டு ஒருவர் “உங்களுக்கு என்ன கோடி கணக்கில் வெச்சிருப்பீங்க.. உட்காந்து சாப்பிடுவீங்க… ஏழைகள் என்ன பண்ணுவாங்க?” என கேள்வி கேட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்த கிருஷ்ணா “என்னை சார்ந்து இருக்கும் டிரைவர், பணியாளர், வாட்ச் மேன் உள்ளிட்டவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்களும் செய்யுங்கள். உங்களை சார்ந்து இருப்பவர்களை பார்த்து கொண்டால் நல்லது” என பதில் அளித்துள்ளார். கிருஷ்ணாவின் இந்த பதிவு பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது. 

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »