சென்னை: பழம்பெரும் நடிகர் ஐ.எஸ்.ஆரின் மகன் செல்வகுமார் இயக்கும் படம், ‘யாதெனக் கேட்டேன்’. கண்ணதாசனின் ‘யாதெனக்கேட்டேன்’ என்ற கவிதையை, கதையாக்கி இயக்குகிறார். ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் தயாரிக்கும் இதில் கண்ணதாசனின் பேரன் முத்தையா (அண்ணாதுரை கண்ணதாசனின் மகன்) நாயகனாக அறிமுகமாகிறார். ஜோடியாக ஷனாயா நடிக்கிறார். மற்றும் மார்கெட்ராஜா விஹான், வைஷாலி, கார்த்திஷ், சோலை உட்பட பலர் நடிக்கின்றனர். விவேக் நாராயணன் இசை அமைத்துள்ளார். பொன் காசிராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி ஐ.எஸ்.ஆர் செல்வகுமார் கூறும்போது, “இது ஒரே நாளில் நடக்கும் கதையை கொண்ட படம். ஒரு வீட்டுக்கு கடவுள் வருகிறார். அவருக்கு என்னவாகிறது என்பதுதான் கதை. புதிர் கதையை கொண்ட இதில் நகைச்சுவைக்காக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கி இருக்கிறோம். முத்தையா நவீன நாடகங்களில் நடித்து வருபவர். இதில் சிறப்பாக நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்துவிட்டது” என்றார்.
Source: Hindu