Press "Enter" to skip to content

சிவகார்த்திகேயன் ரவிக்குமார் படம் என்ன ஆச்சு? புதிய தகவல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் ’இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ஒன்று உருவாகி வந்த நிலையில் திடீரென இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

சயின்ஸ் பிக்சன் திரைப்படமான இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் திடீரென தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டது

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் இரண்டு வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது

மேலும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பிற விபரங்கள் குறித்த அறிவிப்புகளும் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஜூன் அல்லது ஜூலை இந்தப் படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

Source: Webdunia.com

More from திரையுலகம்More posts in திரையுலகம் »