Press "Enter" to skip to content

ரஜினி விவகாரம்: கஸ்தூரி செய்த காரியம் தெரியுமோ?

Samayam Tamil | Updated:

ரஜினி பற்றி கஸ்தூரி போட்ட ட்வீட் ஒன்றை பார்த்து நெட்டிசன்கள் கமெண்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

துக்ளக் ரஜினி

image

துக்ளக் பத்திரிகை விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதிலும் குறிப்பாக பெரியார் விவகாரம் பூதாகரமாக வெடித்து அடங்கியது. பெரியார் விவகாரம் தொடர்பாக மன்னிப்பும் கேட்க முடியாது, வருத்தமும் தெரிவிக்க முடியாது என்றார் ரஜினி. சமூக வலைதளங்களில் அவரை பலரும் விளாசினார்கள், விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.

கஸ்தூரி

image

நடிகை கஸ்தூரி ஒரு ட்வீட் போட்டுள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது, முன்னணி ஆங்கில செய்தி சேனல் ஒன்று எனக்கு கால் செய்து விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கூறியது.

தலைப்பு- ரஜினி பெரியார் துக்ளக் விவகாரம்.

சேனல்: உங்களின் நிலைப்பாடு என்ன?

நான்: நான் ரஜினிகாந்தை ஆதரிக்கிறேன்.

சேனல்: அப்படியா, பரவாயில்லை

(போனை வைத்துவிட்டது)

பொய்

image

கஸ்தூரியின் ட்வீட்டை பார்த்த ஒருவர், எந்த அடிப்படையில் நீங்கள் மிஸ்டர் ரஜினிகாந்தை ஆதரிக்கிறீர்கள். அவர் பொய் சொன்னாலும் மக்கள் ஏன் அவரை ஆதரிக்கிறார்கள் என்று தெரிய வேண்டும் என்றார். அதற்கு கஸ்தூரியோ, பெரியார் மற்றும் திக விஷயத்தில் ரஜினி பொய் சொல்லவில்லை என்று பதில் அளித்துள்ளார்.

டிவி சேனல்

image

நான் ரஜினிக்கு எதிரானவள் என்று கூறி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிஜ கஸ்தூரி யார் என்பதை அவர்களுக்கு காண்பித்திருக்க வேண்டும். வடை போச்சே மொமன்ட் என்று நெட்டிசன் ஒருவர் கமெண்ட் போட்டார். அதற்கு கஸ்தூரி, எனக்கு இந்த ஐடியா தோன்றாமல் போச்சு. உண்மை பேசியே பழகி போச்சு !! என்றார்.

Source: samayam

More from திரையுலகம்More posts in திரையுலகம் »