Press "Enter" to skip to content

இதை செய்தால் கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்கலாம்! நடிகர் பார்த்திபன் சொல்வது உண்மையா?

சீனாவில் 100க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கி இருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க நடிகர் பார்த்திபன் சில ஆயுர்வேத தடுப்பு முறைகளைப் பற்றி விளக்கியுள்ளார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவ தொடங்கியிருப்பதால், ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள முன்னெச்சரிக்கைகள் மூலம் விஷ காய்ச்சலிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்வது எப்படி?
1. வெறும் வயிற்றில் நிலவேம்பு கஷாயம் குடிக்கலாம்.
2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கிலோய் (அம்ருதா / குடூச்சி/ சீந்தில்கொடி) கஷாயம் உட்கொள்ளலாம்.
3. ஐந்து கருமிளகை நன்றாக மென்று உட்கொள்ளலாம்.
4. கிருஷ்ண துளசி (கரு துளசி) சாறு வடிவத்தில் அல்லது மாத்திரை வடிவில் வெறும் வயிற்றில் இரண்டு முறை தனியாகவோ அல்லது மேற்குறிப்பிட்ட அனைத்துடன் ஒன்றாகவோ எடுத்துக்கொள்ளலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸூக்காக எந்த ஒரு சிறப்பு மருந்தும் இல்லை என சொல்லபப்டும் நிலையில் பார்த்திபன் அறிவித்துள்ள இந்த முறைகள் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

Source: Webdunia.com

More from திரையுலகம்More posts in திரையுலகம் »