வேலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் ஆய்வக உடனாள் மற்றும் ஓட்டுநர் ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள வேலூர் மாவட்டத்தை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
ஆய்வக உடனாள் : 02 காலிப்பணியிடம்
ஓட்டுநர் : 02 காலிப்பணியிடம்
சம்பளம் :
ஆய்வக உடனாள் : ரூ. 15,900 முதல் 50,400/- வரை
ஒட்டுநர் : ரூ. 19,500 முதல் 62,000/- வரை
கல்வித் தகுதி :
ஆய்வக உடனாள் : 10-ம் வகுப்பு தேர்வு எழுதி மதிப்பெண் பட்டியல் பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் : 8-ம் வகுப்பு தேர்ச்சி, தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும், ஊர்தி ஓட்டுவதில் குறைந்தபட்சம் 2 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
01-07-2019 அன்றுள்ளபடி 18 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
அரசு ஆணைப்படி அதிகபட்ச வயது வரம்பில் சலுகைகள் உண்டு.
முக்கிய குறிப்பு : ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் அல்லது பிற்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை விட மேற்பட்ட பொதுக் கல்வித் தகுதி அல்லது கல்லூரி பட்ட படிப்பு பெற்றிருந்தால் அதிகபட்சமாக 57 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை https://vellore.nic.in/notice_category/recruitment/ பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்ககளை சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும் அல்லது நேரில் ஒப்படைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://vellore.nic.in/notice_category/recruitment/ பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.02.2020 மாலை 5.45 மணி வரை
The post வேலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes