Press "Enter" to skip to content

வேலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் ஆய்வக உடனாள் மற்றும் ஓட்டுநர் ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள வேலூர் மாவட்டத்தை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

ஆய்வக உடனாள் : 02 காலிப்பணியிடம்
ஓட்டுநர் : 02 காலிப்பணியிடம்

சம்பளம் :

ஆய்வக உடனாள் : ரூ. 15,900 முதல் 50,400/- வரை
ஒட்டுநர் : ரூ. 19,500 முதல் 62,000/- வரை

கல்வித் தகுதி :

ஆய்வக உடனாள் : 10-ம் வகுப்பு தேர்வு எழுதி மதிப்பெண் பட்டியல் பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் : 8-ம் வகுப்பு தேர்ச்சி, தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும், ஊர்தி ஓட்டுவதில் குறைந்தபட்சம் 2 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

01-07-2019 அன்றுள்ளபடி 18 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
அரசு ஆணைப்படி அதிகபட்ச வயது வரம்பில் சலுகைகள் உண்டு.

முக்கிய குறிப்பு : ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் அல்லது பிற்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை விட மேற்பட்ட பொதுக் கல்வித் தகுதி அல்லது கல்லூரி பட்ட படிப்பு பெற்றிருந்தால் அதிகபட்சமாக 57 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை https://vellore.nic.in/notice_category/recruitment/ பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்ககளை சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும் அல்லது நேரில் ஒப்படைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://vellore.nic.in/notice_category/recruitment/ பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.02.2020 மாலை 5.45 மணி வரை
The post வேலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

More from திரையுலகம்More posts in திரையுலகம் »