Press "Enter" to skip to content

வீடு தேடி வரும் பென்சன்: முதல்வரின் சூப்பர் அறிவிப்பு

பென்சன் வாங்க ஒவ்வொரு மாதமும் ஓய்வு பெற்றவர்கள் வங்கிக்கு சென்று அலைந்து கொண்டிருக்கும் நிலையில் வரும் பிப்ரவரி 1-ந்தேதி முதல் வீடு தேடி பென்சன் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் அறிவித்துள்ளார்.

பிப்ரவரி 1-ந்தேதி முதல் பென்சன் வீடு தேடி வழங்கும் திட்டத்தை தொடங்க உள்ளதாகவும் இந்த திட்டத்தின் மூலம் மொத்தம் 54 லட்சத்து 64 ஆயிரம் பேர் பயன் பெற உள்ளதாகவும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் நேற்று முதன்மை செயலாளர் நீலம் சஷ்னி, டி.ஜி.பி. கவுதம் சவால் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும், ஓய்வு பெற்றவர்களுக்கு புதிய பென்சன் கார்டுகள் மற்றும் அரிசி அட்டைகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
The post வீடு தேடி வரும் பென்சன்: முதல்வரின் சூப்பர் அறிவிப்பு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

More from திரையுலகம்More posts in திரையுலகம் »