கோவில்பட்டி ஒன்றியத் தலைவர் பதவிக்கு அதிமுக முறைகேடாக மறைமுகத் தேர்தலில் வென்றதாக கூறி கனிமொழி தலைமையில் இன்று போராட்டம் நடைபெற்றது.
சுமார் 3 மணி நேரமாக நடைபெற்று வரும் தர்ணா போராட்டத்தில் 2 திமுக தொண்டர்கள் திடீரென தீக்குளிக்க முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக மாணவரணி அமைப்பாளர் சரவணன் மற்றும் லட்சுமி ஆகிய இருவர் தான் தீக்குளிக்க முயற்சி செய்ததாகவும் உடனடியாக காவலுக்கு இருந்த காவல்துறையினர் இருவரையும் காப்பாற்றி பாதுகாப்பாக அனுப்பி வைத்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
திமுக எம்பி கனிமொழி முன்னால் இரண்டு திமுக தொண்டர்கள் திடீரென தீக்குளிக்க முயற்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
The post கனிமொழி முன் தீக்குளிக்க முயற்சித்த திமுக தொண்டர்கள்: பெரும் பரபரப்பு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes