Press "Enter" to skip to content

பெண்கள் சிறுவர்கள் உள்பட 20 பேரை பிணைக் கைதியாக பிடித்து வைத்த தீவிரவாதிகள்! பெரும் பரபரப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடைபெறுவதாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் வரவழைக்கப்பட்ட நிலையில் திடீரென அவர்கள் அனைவரும் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த வீட்டை முற்றுகையிட்டு பிணைக்கைதிகளாக இருப்பவர்களை உயிருடன் மீட்க அதிரடி நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றனர்

போலீசாருக்கு உதவும் வகையில் தீவிரவாத எதிர்ப்புப் படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த சில மணி நேரங்களில் அதிரடி நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலை ஏற்பட்டுள்ளது பிணைக்கைதிகளாக இருக்கும் 20 பேருக்கும் ஆபத்தில்லாமல் அவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
The post பெண்கள் சிறுவர்கள் உள்பட 20 பேரை பிணைக் கைதியாக பிடித்து வைத்த தீவிரவாதிகள்! பெரும் பரபரப்பு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

More from திரையுலகம்More posts in திரையுலகம் »