Press "Enter" to skip to content

தேங்காய் உடைப்பதில் இத்தனை விசயமிருக்கா?!

கோவிலுக்கு போகும்போதும், வீட்டில் பூஜையின்போதும் தேங்காய் உடைப்பது நமது வழக்கம். பூஜையின்போது தேங்காயினை உடைக்கும் வழக்கம் எதனால் உண்டானது என்பதை முன்னொரு பதிவில் பார்த்திருக்கோம் . இந்த பதிவில் நாம் தேங்காய் உடைக்கும் தென்படும் அறிகுறிகளை பார்ப்போம்..

* தேங்காயின் முடிப்பாகம் சிறியதாக வட்டமாய் உடைந்தால் செல்வம் சேரும்.

*தேங்காய் ஐந்தில் ஒரு பங்காக உடைந்தால் அழியாத செல்வம் உண்டாகும்.

* சரிசமமாக உடைந்தால் துன்பம் தீரும், செல்வம் பெருகும்

* ஓடு தனியாக கழன்றால் துன்பம் வரும்

*உடைக்கும் பொழுது கையிலிருந்து தவறி கீழே விழுந்தால் குடும்பத்தில் துன்பம் & பொருள் இழப்பு ஏற்படும்.

*நீளவாக்கில் உடைந்தால் தனம் அழிந்து துன்பம் உண்டாகும்

* முடிப்பாகம் இரு கூறானால் தீயினால் பொருள் சேதம்

(9) முடிப்பாகம் இரண்டாக உடைந்து அந்த இரு துண்டுகளோடு அவற்றின் ஓடு உடனே தெறித்து வீழ்ந்தால் நோய்களினால் துன்பம் ஏற்படும்

* சிறு, சிறு துண்டுகளாக உடைந்தால் செல்வம், செல்வாக்கு & ஆபரண லாபம் சேரும்.

* ஆலயத்தில் தெய்வத்திடம் வேண்டிக் கொண்டிருக்கும்பொழுது தேங்காய் உடைக்கும் சத்தம் கேட்டால் வேண்டும் காரியம் வெற்றியை தரும்
The post தேங்காய் உடைப்பதில் இத்தனை விசயமிருக்கா?! appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

More from திரையுலகம்More posts in திரையுலகம் »