Press "Enter" to skip to content

Tharshan நிச்சயம் முடிந்த பிறகு கல்யாணம் பண்ணாமல் ஏமாற்றுகிறார்: தர்ஷன் மீது சனம் காவல்துறையில் புகார்

Samayam Tamil | Updated:

தர்ஷன் தன்னை ஏமாற்றுவதாக நடிகை சனம் ஷெட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சனம் ஷெட்டி

image

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான தர்ஷன் நடிகை சனம் ஷெட்டியை காதலித்து வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் சனம் சென்னையில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று தர்ஷன் மீது மோசடி புகார் அளித்துள்ளார். இந்நிலையில் சனம் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு இது குறித்து பேட்டி அளித்துள்ளார்.

நிச்சயதார்த்தம்

image

பேட்டியில் சனம் கூறியதாவது, பிக் பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கும் முன்பே எனக்கும், தர்ஷனும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அது குறித்து அப்பொழுது பேச வேண்டாம் என்று தர்ஷன் என்னை கேட்டுக் கொண்டார். அதனால் நான் அமைதியாக இருந்தேன். ஜூன் மாதம் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டோம். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு தர்ஷன் வேறு மாதிரியாக நடந்து கொள்ளத் துவங்கினார் என்கிறார் சனம்.

மிரட்டல்

image

பிக் பாஸுக்கு பிறகு தர்ஷன் என்னை அசிங்கப்படுத்தினார். அவர் என்னை உடலாலும், மனதாலும் துன்புறுத்தினார். அவரின் குடும்பத்தாரும் என்னை மிரட்டினார்கள். எனக்கு நடந்த கொடுமை, நிச்சயதார்த்தம் உள்ளிட்டவற்றை நான் வெளியே சொன்னால் என்னை எப்படி அமைதியாக்குவது என்று தங்களுக்கு தெரியும் என தர்ஷன் குடும்பத்தார் கூறினார்கள் என்று சனம் தெரிவித்துள்ளார்.

போலீஸ்

image

நான் தர்ஷனை சமாதானம் செய்ய முயன்றேன். ஆனால் அவர் என்னை கண்டுகொள்ளவே இல்லை. அவர் என்னை ஒருபோதும் காதலியாகவோ, வருங்கால மனைவியாகவோ நடத்தியதே இல்லை. வேறு வழியில்லாமல் தான் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தேன். மேலும் மகளிர் ஆணையத்திலும் புகார் கொடுக்கவிருக்கிறேன் என்று சனம் கூறியுள்ளார்.

நடிகை

image

தர்ஷனுக்கு நான் ஒரு நடிகை என்பது தெரியும். நான் சக நடிகர்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக குற்றம் சாட்டுகிறார். நான் தான் அவருக்கு அனைத்துமே செய்தேன். நிச்சயதார்த்தம், திருமண செலவு உள்பட அவருக்காக பல பொருட்கள் வாங்கியதற்காக ரூ. 20 லட்சம் செலவு செய்துள்ளேன். அவருக்கு விசா வாங்க உதவி செய்தேன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நான் தான் அவர் சார்பில் விண்ணப்பத்தை அனுப்பினேன் என்று சனம் கூறியுள்ளார்.

அநீதி

image

ஒரு நடிகையாக, பெண்ணாக எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை தர்ஷன் மீது வழக்குப்பதிவு செய்து அவருக்கு சம்மன் அனுப்புவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் எந்த குற்றச்சாட்டையும் மறுக்க முடியாது. திரைத்துறையில் எனக்கு உள்ள கான்டாக்டுகளை வைத்து நான் தான் அவருக்கு உதவி செய்தேன் என்று சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

Source: samayam

More from திரையுலகம்More posts in திரையுலகம் »