Samayam Tamil | Updated:
சனம் ஷெட்டி தெரிவித்துள்ள புகார் குறித்து தர்ஷனின் மேனேஜர் விளக்கம் அளித்துள்ளார்.
சனம் ஷெட்டி
பிக் பாஸ் 3 பிரபலம் தர்ஷன் மீது நடிகை சனம் ஷெட்டி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தர்ஷனுக்கும், தனக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்றும், திருமணம் செய்யாமல் அவர் ஏமாற்றுவதாகவும் சனம் தெரிவித்துள்ளார். மேலும் தர்ஷன் தன்னை உடலாலும், மனதாலும் கொடுமைப்படுத்துவதாகவும் சனம் புகார் தெரிவித்துள்ளார்.
பொய்
சனம் ஷெட்டி தெரிவித்த புகார் குறித்து தர்ஷனை தொடர்பு கொள்ள முயன்றபோது அவரின் மேனேஜர் தான் விளக்கம் அளித்தார். சனம் கூறும் எதுவும் உண்மை இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் தர்ஷன் இது குறித்து இன்னும் வாய் திறக்கவில்லை. சனம் அளித்த புகாரை பார்த்த கவின் ஆதரவாளர்கள் இனியாவது தர்ஷன் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள். சும்மா அவரை கொண்டாட வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.
தர்ஷன்
சனம் புகார் குறித்து தர்ஷன் ஏதாவது தெரிவிப்பாரா என்று அவரின் ட்விட்டர் பக்கம் செல்பவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம். 2019ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட சின்னத்திரை பிரபலங்கள் பட்டியலில் தனக்கு 4வது இடம் கிடைத்துள்ளதற்காக சென்னை டைம்ஸ் மற்றும் தன் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் போட்டிருக்கிறார். அதை தவிர வேறு எதுவும் இல்லை.
ஷெரின்
பிக் பாஸ் 3 வீட்டில் இருந்தபோது தர்ஷன், ஷெரின் இடையே காதல் என்று பேசப்பட்டது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு தர்ஷன் வேறுமாதிரியாக நடப்பதாகவும், தன்னை கண்டுகொள்வது இல்லை என்றும் சனம் கூறியதை வைத்து புதுக்காதல் என்று பேச்சு கிளம்பியுள்ளது. அதாவது ஷெரின் மீதான காதலால் சனம் ஷெட்டியை தர்ஷன் திருமணம் செய்ய மறுப்பதாக பிக் பாஸ் பார்வையாளர்கள் கிளப்பிவிட்டுள்ளனர்.
Source: samayam