Press "Enter" to skip to content

ரசிகர்களை ஏமாற்றிய தீபிகா, கங்கனா

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளாக இருக்கும் தீபிகா படுகோனே மற்றும் கங்கனா ரணாவத் இருவரும் தன்னுடைய ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறார்கள்.

இந்தி திரையுலகின் பிரபலமான நாயகிகள் தீபிகா படுகோனே, கங்கனா ரணாவத். இருவரும் தனி கதாநாயகிகளாக நடித்த ‘சப்பக்‘ மற்றும் ‘பங்கா’ ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளிவந்தன.

ஆனால், இரண்டு படங்களுமே எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெற முடியாமல் தோல்வியைத் தழுவியது பாலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு படங்களின் பட்ஜெட்டும் ஏறக்குறைய ஒன்றுதான்.

இரண்டு படங்களையும் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தான் தயாரித்தது. இரண்டு படங்களும் தலா 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ’சப்பக்‘ படம் மூலம் ரூ.5 கோடி நஷ்டமும், ‘பங்கா’ படம் மூலம் ரூ.10 கோடி நஷ்டமும் வரும் என்கிறார்கள்.

இரண்டு படங்களின் தியேட்டர் வசூலை விட சாட்டிலைட் உரிமை மற்றும் டிஜிட்டல் உரிமை மூலம் தான் நஷ்டத்தை சரிக்கட்ட முடியுமாம். இரண்டு படங்களின் கதையும் வாழ்க்கையில் போராடி சாதித்த பெண்களின் கதை தான். ஆனால், இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் ஆதரவு இல்லாமல் போனது.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »