கடந்த சில நாட்களாக டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடைபெற்ற முறைகேடு குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட ஒரு சிலர் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்ததுண்டு
அரசு தேர்வு எழுத பல மணி நேரம், பல நாட்கள் தூங்காமல் படித்து தேர்வு எழுதிய மாணவர்கள் மத்தியில் ஒருசிலருக்கு குறுக்கு வழியில் ஈடுபட்டு அரசு வேலை பெற்றதை கண்டு தமிழகமே அதிர்ச்சியில் மூழ்கியது
இந்த நிலையில் இந்த முறைகேடு கமலஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: TNPSC இப்போது TNPPSC (Thamizh Nadu Pre-Paid Service Commission) ஆகி இருக்கிறது. முன் புரோக்கர்களிடம் கொடுத்து, பின் அரசிடம் சம்பளமாக பெறும் முறை தான் Group 1 முதல் Group 4 வரை நடக்கும் என்றால் 5ஆம் வகுப்புக்கும், 8ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு எதற்கு? தகுதித்தேர்வுகள் எதற்கு?
கமல்ஹாசனின் இந்த டுவீட்டுக்கு ஆதரவுகள் குவிந்து வருகிறது
TNPSC இப்போது TNPPSC (Thamizh Nadu Pre-Paid Service Commission) ஆகி இருக்கிறது.முன் புரோக்கர்களிடம் கொடுத்து, பின் அரசிடம் சம்பளமாக பெறும் முறை தான் Group 1 முதல் Group 4 வரை நடக்கும் என்றால் 5ஆம் வகுப்புக்கும், 8ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு எதற்கு? தகுதித்தேர்வுகள் எதற்கு?— Kamal Haasan (@ikamalhaasan) February 1, 2020
The post TNPPSC, தமிழ்நாடு பிரிபெய்டு சர்வீஸ் கமிஷன்: கமல்ஹாசன் கிண்டல் appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes