Press "Enter" to skip to content

சம்பாதிக்க ஆசைப்பட்டு நஷ்டமடைந்த அனுஷ்கா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, சம்பாதிக்க ஆசைப்பட்டு நஷ்டமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் அனுஷ்கா. இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார். இடையில் அவர் உடல்எடை கூடிவிட, அதைக் குறைக்கும் முயற்சியில் இருந்தார். இதற்காக அவர் அமெரிக்கா சென்று வந்ததாகவும் கூறப்பட்டது. இந்தநிலையில் அவர் குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தன. இதனால் அவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகச் செய்திகள் வந்தன.

நடிகர் பிரபாசை அவர் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அதை இருவருமே மறுத்தனர். அவர் என் நண்பர் என்று அனுஷ்காவும், என் தோழி என்று பிரபாசும் தெரிவித்தனர். ஐதராபாத்தில் 4 படுக்கை அறை கொண்ட பிளாட் ஒன்றை நடிகை அனுஷ்கா வைத்திருந்தார். பிரமாண்டமான இந்த வீட்டை வாங்கிய கொஞ்ச காலத்திலேயே தெலுங்கானா பிரச்சினை தலை தூக்கியது.

இந்தப் பிரச்சினை காரணமாக சொத்துக்கள் விலை இறங்கிவிடும் என்று யாரோ கிளப்பிவிட, அதை ரூ.5 கோடிக்கு விற்று விட்டார் அனுஷ்கா. அதன் அப்போதைய மதிப்பு ரூ.10 கோடிக்கு மேல் என்கிறார்கள். இதே போல ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்த அனுஷ்கா, விசாகப்பட்டினத்தில் ஏராளமான நிலங்களை வாங்கியிருந்தார். 2014-ம் ஆண்டு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, அமராவதியை தலை நகராக்கும் முயற்சியில் இருந்தார். 

இதனால் விசாகப்பட்டினத்தில் நிலங்களின் விலை ஏறாது என்று முடிவு செய்த அனுஷ்கா, வெறுத்துப்போனார். இதையடுத்து விசாகப்பட்டினத்தில் வாங்கிய நிலங்களில் சுமார் 80 சதவிகிதத்தை குறைந்த விலைக்கு விற்றுவிட்டார். ஆனால், இப்போது விசாகப்பட்டினத்தில் நிலங்களின் விலை கன்னா பின்னா வென்று ஏறியிருக்கிறது. இதை நினைத்து இப்போது அவர் வருத்தப்படுவதாக கூறுகிறார்கள்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »