Press "Enter" to skip to content

காலணி கழட்டிய விவகாரம்: சிறுவனின் குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர்

14 வயது சிறுவன் ஒருவனை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் தனது செருப்பை கழட்ட சொன்னதாக நேற்று வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இதுகுறித்து காவல் நிலையத்திலும் ஒரு சில அமைப்புகள் புகார் அளித்துள்ளனர். மேலும் சிறுவனின் தாயார் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அமைச்சர் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருவதால் இந்த விஷயத்தை முடிவுக்குக் கொண்டுவர சிறுவனின் குடும்பத்தினருடன் அமைச்சர் சீனிவாசன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்

ஊட்டி விருந்தினர் மாளிகையில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் சிறுவனின் குடும்பத்தினரை அவர் சமாதானப்படுத்தி வருவதாகவும் இந்த பிரச்சினை இன்று தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது
The post காலணி கழட்டிய விவகாரம்: சிறுவனின் குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

More from திரையுலகம்More posts in திரையுலகம் »