அதிமுக எம்எல்ஏவுக்கு எதிராக திருமாவளவன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு சற்று முன்னர் அதிரடியாக வெளியாகி உள்ளது
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக எம்எல்ஏ முருகுமாறன் என்பவர் காட்டுமன்னார்கோவிலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி அந்தத் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்
இந்த மனுவின் மீதான விசாரணை கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில் சற்று முன்னர் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பின் படி அதிமுக எம்எல்ஏ முருகுமாறன் வெற்றி பெற்றது செல்லும் என்றும் நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளை ஆய்வு செய்ய கோரி திருமாவளவன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படும்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து அதிமுகவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
The post திருமாவளவன் தாக்கல் செய்த வழக்கின் அதிரடி தீர்ப்பு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes