Press "Enter" to skip to content

கற்பழிக்க வந்தவர்களிடம் கொரோனாவை சொல்லி தப்பித்த இளம் பெண்

முன்பெல்லாம் தன்னை கற்பழிக்க வரும் கயவர்களிடம் தனக்கு எய்ட்ஸ் இருப்பதாக சொல்லி தப்பித்த பெண்கள் குறித்த செய்திகளை பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது சீனாவில் பாலியல் பலாத்காரம் செய்ய வந்த இளைஞர்களிடம் தான் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டு உள்ளதாகவும் அதற்கான சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறி தப்பித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சீனாவில் 23 வயது இளம்பெண் ஒருவரை மூன்று பேர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் தனக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கூறியதுடன் பயங்கரமாக இருமல் செய்வது போல் நடித்துள்ளார். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த பாலியல் பலாத்காரம் செய்ய வந்தவர்கள் தலைதெறிக்க ஓடி விட்டனர். அதன்பின்னர் அந்த இளம் பெண் போலீசாரிடம் புகார் கொடுக்க, போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த இளைஞர்களை தேடி வருகின்றனர். சமயோசிதமாக தனக்கு கொரோனா வைரஸ் காய்ச்சல் இருப்பதாக கூறி தப்பித்த இளம்பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

The post கற்பழிக்க வந்தவர்களிடம் கொரோனாவை சொல்லி தப்பித்த இளம் பெண் appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

More from திரையுலகம்More posts in திரையுலகம் »