Press "Enter" to skip to content

சம்பளத்தை நன்கொடையாக கொடுத்த சன்னி லியோன்

தமிழ், இந்தி, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் சன்னி லியோன், தனது சம்பளத்தை ஆதரவற்றோர் இல்லத்திற்கு நன்கொடையாக கொடுத்துள்ளார்.

ஆபாச படங்களில் நடித்து கொண்டிருந்த சன்னி லியோன் ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்க வந்து கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். பல்வேறு இந்தி படங்களில் நடித்துள்ள அவர், தற்போது ‘வீரமாதேவி’ என்ற படத்தின் மூலம் தமிழிலும், ‘ரங்கீலா’ எனும் படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமாக இருக்கிறார். 

இந்நிலையில், இவர் இந்தியில் உருவாகும் வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளார். இது முழுக்க முழுக்க காமெடி தொடர் என கூறப்படுகிறது. மேலும் இந்த வெப் தொடரில் நடித்ததன் மூலம் தனக்கு கிடைத்த சம்பளத்தை மும்பையில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு சன்னி லியோன் நன்கொடையாக கொடுத்துள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »