Press "Enter" to skip to content

ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா தம்பதிக்கு பிப்ரவரி 15-ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.

தமிழில் பிரபு தேவாவுடன் ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக 2007-ல் வெளியான ‘அப்னே’ என்ற இந்தி படத்தில் தர்மேந்திரா, சன்னிதியோல் ஆகியோருடன் நடித்து இருந்தார். அதன்பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கினார். 

ஷில்பா ஷெட்டியும், தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவும் 2009-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில், 44 வயதான ஷில்பா ஷெட்டிக்கு, பெண் குழந்தை பிறந்துள்ளது. பிப்ரவரி 15 அன்று பிறந்த இந்தக் குழந்தைக்கு சமீஷா என்று பெயர் சூட்டியுள்ளனர். 

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »