Press "Enter" to skip to content

83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா

தமிழில் இரும்புத் திரை மற்றும் தேனிலவு உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை வைஜெயந்தி மாலா, 83 வயதிலும் கோல்ப் விளையாடி அசத்தியுள்ளார்.

தமிழில் இரும்புத் திரை மற்றும் தேனிலவு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் இந்தி நடிகையான வைஜெயந்தி மாலா. அவருக்கு தற்போது வயது 83. இவர் 75க்கும் அதிகமான இந்தி படங்களில் நடித்திருக்கிறார். அவர் தற்போது, கோல்ப் விளையாடுவது போன்ற படங்களை இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அவர் இந்த வயதிலும் அசராமல் கோல்ப் விளையாடுவதைப் பார்த்து விட்டு, பலரும் அசந்து போய் உள்ளனர். இது குறித்து, வைஜெயந்தி மாலா கூறியிருப்பதாவது: எனக்கு எப்போதுமே கோல்ப் விளையாடுவது பிடிக்கும்; அந்த விளையாட்டை இளம் வயது முதல் நான் நேசிக்கிறேன். என்னுடைய கணவரும் என்னை கோல்ப் விளையாடவிட்டு அதைப் பார்த்து ரசிப்பார்.

 

என் இளமை காலங்களில் நான் குதிரை சவாரி செய்வேன். டேபிள் டென்னிஸ், பூப்பந்து விளையாடுவதும் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். இந்த வயதிலும் கோல்ப் விளையாடுகிறீர்களே என பலரும் கேட்கின்றனர். தொடர்ந்து கோல்ப் விளையாடுவதாலேயே, என்னுடைய உடம்பு இன்றைக்கும் கோல்ப் விளையாட வைத்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »