Press "Enter" to skip to content

விஷால் – நாசர் இடையே மோதல்?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளியவரோடு கரம் கோர்க்கவில்லை என நாசரின் மனைவி கமீலா நாசர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் இரண்டிலும் நடிகர் விஷால் முக்கிய பொறுப்பில் இருந்தார். தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் பதவி வகித்தார். ஆனால், இரண்டுமே தற்போது தனி அதிகாரி மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இரண்டு சங்கங்களுக்கும் முறைப்படி தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நடிகர் சங்கத்தில் மீண்டும் நாசர் தலைமையிலான அணி போட்டியிடுமா, தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் போட்டியிடுவாரா என்ற கேள்விகள் எழுந்தன. தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் அணி சார்பாக, நாசரின் மனைவி கமீலா நாசர் போட்டியிடுவார் என்று தகவல் பரவியது. ஆனால், அவருடைய டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

’இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதை நன்கு அறிவேன். அதற்காக கவலையும் அக்கறையும் கொள்கிறேன். இந்நிலைக்கு தள்ளியவரோடு கரம் கோர்க்கவில்லை. எந்த அணியோடும் இப்போது வரை இல்லை. சங்கத்தின் மேன்மைக்காக உழைப்பவரோடு மட்டுமே என் கை இணையும் என்று பதிவிட்டுள்ளார்.

அவருடைய பதிவின் மூலம் விஷாலின் செயல்பாடு அவருக்குப் பிடிக்கவில்லை. எனவே விஷாலுக்கும், நாசருக்கும் இடையே பிளவு வந்துள்ளதாக திரையுலக வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் 2 அணிகள் மோதுவது உறுதியாகி இருக்கிறது. ஜே.சதீஷ் குமார், சத்யஜோதி தியாகராஜன், அம்மா கிரியே‌ஷன்ஸ் சிவா, கே.ராஜன், ஞானவேல்ராஜா, பி.எல்.தேனப்பன், சிங்காரவேலன் உள்ளிட்டோர் தனி அணியாகவும் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஒரு அணியாகவும் மோத இருக்கிறார்கள். இந்த போட்டியை தவிர்த்துவிட்டு தேர்தல் இல்லாமலேயே புதிய நிர்வாக குழு தேர்ந்தெடுக்கப்பட பேச்சு வார்த்தையும் நடக்கிறது.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »