தமிழில் பூ, மரியான், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்த பார்வதி, தற்போது புதிய படத்தில் ஆராய்ச்சி மாணவியாக நடித்துள்ளார்.
தமிழில் பூ, மரியான், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பார்வதி. ஆனால் சமீபகாலமாக அவருக்கு மலையாளத்திலும் தமிழிலும் பட வாய்ப்புகள் இல்லை. இன்னும் சொல்லப்போனால் சில காலத்திற்கு சினிமாவிலிருந்து ஒதுங்கி இருக்கலாம் என அவரே முடிவு எடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பார்வதி நடிப்பில் உருவாகியுள்ள வர்த்தமானம் என்கிற படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப்படத்தில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவியாக பார்வதி நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாக ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மாணவர்கள் பிரச்சனை, அரசியல் விவகாரம் என ஏதோ சில சர்ச்சைகளில் சிக்கி வருவதை மையப்படுத்தியே இதன் கதையும் உருவாக்கப்பட்டுள்ளதாம்.
தேசியவிருது பெற்ற இயக்குனரான சித்தார்த் சிவா என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். பார்வதிக்கு ஜோடியாக ரோஷன் மேத்யூ நடித்துள்ளார்.
Source: Malai Malar