Press "Enter" to skip to content

ஒரே வழிதான் இருக்கு – ராகவா லாரன்ஸ்

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது என்று நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் நோயின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் 144 தடைச்சட்டம் போட்டுள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால் பலரும் இதை பொருட்படுத்தாமல் வெளியே சென்று வருகிறார்கள். இதற்காக சினிமா நட்சத்திரங்கள் பலரும் அறிவுரை கூறி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் இயக்குனர் லாரன்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஒரே வழிதான் இருக்கிறது. யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். ஊருக்கு செல்கிறேன் என்று பெற்றோர்களுக்கு நோயை பரப்பி விட்டு விடாதீர்கள். காலில்  விழுந்து கேட்கிறேன் என்று கூறியுள்ளார். 

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »