Press "Enter" to skip to content

சிம்புவுக்கு பகைவனாகும் ஆர்யா?

நடிகர் சிம்பு அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தில் அவருக்கு வில்லனாக ஆர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தடைபட்டுள்ளது. கொரோனா பாதிப்பு முடிவுக்கு வந்த பின் படப்பிடிப்பு நடைபெறும். 

இப்படத்தை தொடர்ந்து மிஸ்கின் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், சமீபத்திய தகவலின் படி, அரிமா நம்பி, இருமுகன் போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க  ஆக்ஷன் படமாக உருவாக உள்ள இதில், ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க உள்ளதாகவும்  சொல்லப்படுகிறது.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »