Press "Enter" to skip to content

சோசியல் டிஸ்டன்ஸ் மெயின்டைன் செய்த மக்கள் விரும்பத்தக்கதுடர் படக்குழுவினர்

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படக்குழுவினர் சோசியல் டிஸ்டன்ஸ் மெயின்டைன் செய்திருக்கிறார்கள்.

மத்திய அரசு அறிவித்த 21 ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு மக்கள் வீட்டுக்குள் முடங்கும் நிலை உள்ளது. அத்தியாவசிய தேவை தவிர மற்ற விஷயங்களுக்காக மக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. 

இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”பிராப்ளம்ஸ் வில் கம் அண்ட் கோ, கொஞ்சம் சில் பண்ணு மாப்பி. வெளியில் சுற்ற முடியாத போது நாங்கள் என்ன பண்ணுவோம் ? மாஸ்டர் டீம் சோஷியல் டிஸ்டன்ஸிங்கில் இருக்கிறோம் நீங்கள் ?” என்று விஜய்,  அனிருத், தயாரிப்பாளர் ஜெகதீஷ் ஆகியோருடன் வீடியோ கால் பேசும் போட்டோவை அவர் வெளியிட்டுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »