தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் திரைப்படம் இறுதி கட்டத்தில் சிக்கித் தவித்து வருகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் 1981-ம் ஆண்டு வெளியான திரைப்படம், ‘நெற்றிக்கண்.’ இந்தப் படத்தின் தலைப்பை நயன்தாரா நடிக்கும் புதிய படம் ஒன்றுக்கு பெயராக சூட்டியிருக்கிறார்கள். இதில், நயன்தாரா போலீஸ் அதிகாரியாகவும், கண் பார்வையற்றவராகவும் நடிக்கிறார்.
இந்தப் படத்தை மிலிந்த் ராவ் டைரக்டு செய்கிறார். இவர், ‘அவள்’ என்ற திகில் படத்தை இயக்கியவர். நயன்தாராவின் காதலரும், டைரக்டருமான விக்னேஷ் சிவன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் நடைபெற்றது. 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா வைரஸ் பிரச்சினையால் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா பிரச்சினை தீர்ந்ததும் சென்னையிலேயே படப்பிடிப்பை தொடர திட்டமிட்டு இருக்கிறார்கள்.
Source: Malai Malar