Press "Enter" to skip to content

கிடப்பில் போடப்பட்ட திரிஷா படம்

மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக திரிஷா நடித்து வந்த படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான திரிஷ்யம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது அந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. படத்துக்கு, ‘ராம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில், மோகன்லால் ஜோடியாக திரிஷா நடிக்கிறார். 50 சதவீத படம் வளர்ந்த நிலையில், கொரோனா ஊரடங்கு பிரச்சினை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டு கேரளாவில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டாலும், உடனடியாக, ‘ராம்’ படப்பிடிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காரணம், மீதமுள்ள காட்சிகளை லண்டனில் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது. அதற்கு அனுமதி கிடைப்பது, சுலபம் அல்ல. 

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா, வெளிநாட்டு படப்பிடிப்புக்கும் தடையாக இருந்து வருகிறது. எனவே, ‘ராம்’ படத்தை அப்படியே கிடப்பில் போடுவதற்கு படக்குழுவினர் முடிவு செய்து இருக்கிறார்கள். இந்த இடைவெளியில், குறைந்த பட்ஜெட்டில் வேறு ஒரு படத்தை இயக்க டைரக்டர் ஜீத்து ஜோசப் முடிவு செய்து இருக்கிறார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »