மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மூலம் நடிகர் ஆரி அருஜுனா இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்திருக்கிறார்.
மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக நேற்று மே 17 சேலம் தாரமங்கலம் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் 410 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணமாக அரிசி, பருப்பு, உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்கள் வழங்கினர்.
இதனை பற்றி மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை நிறுவனர் ஆரி அருஜுனா கூறுகையில்….
கொரோனா வைரஸ் காரணமாக உலகிலுள்ள அனைத்து துறையினரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அதேபோல் சேலம் மாவட்டத்தின் தாரமங்கலத்திலுள்ள நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழ தமிழ்களும் 50 நாட்களுக்கு மேலாக எந்த வருமானமும் இன்றி மிகுந்த சிரமப்படுகிறார்கள் என்று தகவல் அறிந்து அவர்களுக்கு உதவும் பொருட்டு மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மற்றும் கனடா வாழ் ஈழத் தமிழர்கள் இணைந்து சுமார் 410 சேலம் தாரமங்கலம் பகுதியை சார்ந்த இலங்கை அகதிகள் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்கள் வழங்கியுள்ளோம்.
சமூகம் சந்தித்து இருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் கரம் நீட்டி கரம் தூக்குவோம் என்றார்
Source: Malai Malar