Press "Enter" to skip to content

சிங்கம்பட்டி ராஜா மறைவு – சிவகார்த்திகேயன் இரங்கல்

சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் திர்த்தபதி இறப்பிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல் தெரிவித்த டுவிட் செய்துள்ளார்.

இந்தியாவின் கடைசி முடிசூட்டபட்ட மன்னன் சிங்கம்பட்டி ஜமீன்தார் டி.என்.எஸ்.முருகதாஸ் திர்த்தபதி (89). உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜமீன்தார் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் சிவகார்த்திகேயன். அதில் “சிங்கம்பட்டி சீமராஜாவாக நடித்ததற்கு எப்போதும் பெருமை கொள்வேன் அய்யா.  அய்யாவின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும், சிங்கம்பட்டி மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்” என பதிவிட்டுள்ளார்.

“சீமராஜா” என்னும் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் “சிங்கம்பட்டி சீமராஜா” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கம்பட்டி சீமராஜாவாக நடித்ததற்கு எப்போதும் பெருமை கொள்வேன் அய்யா🙏 அய்யாவின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும்,சிங்கம்பட்டி மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் #RIPsingampattiRajapic.twitter.com/hjUyA9AFXL

— Sivakarthikeyan (@Siva_Kartikeyan)

May 25, 2020

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »