Press "Enter" to skip to content

ஊரடங்கு நேரத்தில் காதலனை கரம்பிடித்த பெண் இயக்குனர்

கொரோனா ஊரடங்கு நேரத்தில் பிரபல பெண் இயக்குனர் தன் காதலனை கரம்பிடித்து இருக்கிறார்.

கன்னட திரைப்பட உலகில் பிரபல இயக்குனராக இருப்பவர், சுமனா கித்தூர். இவரது சொந்த ஊர் கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா தாலுகா கித்தூர் ஆகும். இவர் சிவமொக்காவை சேர்ந்த என்ஜினீயரான சீனிவாசை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் வைத்து திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருந்தனர். 

 இந்த நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு இருவரும் புதுச்சேரி மாநிலத்திற்கு சென்றிருந்தனர். கொரோனா ஊரடங்கால் கர்நாடகம் திரும்ப முடியாமல் அவர்கள் அங்கேயே சிக்கிக்கொண்டனர். இதனால் சுமனா கித்தூரும், சீனிவாசும் புதுச்சேரியில் வைத்து எளிமையாக திருமணம் செய்துகொண்டனர். 

 இந்த நிலையில் சுமனா கித்தூர் தனது டுவிட்டர் பக்கத்தில், தனது காதலனை கரம்பிடித்த புகைப்படங்களை வெளியிட்டார். அதில் அவர், எங்களது திருமணம் புதுச்சேரியில் எளிமையாக நடந்தது. இதில் இரு குடும்பத்தினர் மட்டும் கலந்துகொண்டனர் என்று தெரிவித்துள்ளார். தற்போது சுமனா கித்தூர்- சீனிவாசின் திருமண புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கன்னட திரைப்பட பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »