Press "Enter" to skip to content

பிரேம்ஜியின் திடீர் முடிவு – ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

தமிழ் சினிமா நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன், அண்ணன் வெங்கட்பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில்,

வீட்டில் எனக்கு திருமணமே வேண்டாம் என கூறி விட்டேன். என்னுடைய வாழ்க்கையில் நிம்மதியாக, ஜாலியாக இருக்க விரும்புகிறேன். நமக்கு எதுக்கு கல்யாணம், குழந்தை குட்டி எல்லாம். தனியாக வாழ்வதே மகிழ்ச்சி.

 மற்றவருக்காக வாழ விரும்பவில்லை. எனக்காக வாழ ஆசைப்படுகிறேன். கல்யாணம் பண்ண சொல்லி வீட்டில் எவ்வளவோ வற்புறுத்தினார்கள், ஆனால் முடியவே முடியாது என்று கூறிவிட்டேன்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »