பிரபல நடிகையாக இருக்கும் எமி ஜாக்சன் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
அமெரிக்காவில் போலீசாரால் கொல்லப்பட்ட மூன்று ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார், நடிகை எமி ஜாக்சன்.
“இதயம் கணக்கிறது. மூன்று ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அகமத் ஆர்பெரி, பிரோனா டெய்லர் மற்றும் ஜார்ஜ் பிலாய்ட் ஆகியோரின் கொடூரமான கொலைகள் பற்றிய செய்திகளைப் பார்த்தேன். இது மனிதகுலத்திற்கு எதிரான பாவம். கறுப்பின மக்களுக்கு எதிராக நடக்கும் போலீசின் மிருகத்தனத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நாம் அனைவரும் கறுப்பின மக்களுக்கு ஆதரவாக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
சமூகவலைதளங்களில் பதிவு செய்வதைவிட உரையாடலை மேற்கொள்வோம். நாம் அனைவரும் ஒன்றுபட்டு அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்“ என்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார்.
Source: Malai Malar