Press "Enter" to skip to content

மாஸ் வில்லியாக ரீ-என்ட்ரி கொடுக்கும் ரோஜா?

90-களில் முன்னணி நடிகையாக இருந்த ரோஜா, தற்போது பிரபல நடிகரின் படத்தில் வில்லியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாக உள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். 

இந்நிலையில், இப்படத்தில் நடிகை ரோஜா வில்லியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் கவனம் செலுத்துவந்த ரோஜா படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்படத்தின் கதையை கேட்டதும் பிடித்துப்போனதால் உடனே நடிக்க சம்மதித்ததாக கூறப்படுகிறது. இப்படம் மூலம் அவர் பவர்புல்லான வில்லியாக ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »