Press "Enter" to skip to content

நடிகைகள் இனவெறி குறித்து பேசுவது வெட்கக்கேடானது…. கங்கனா சாடல்

இனவெறிக்கு எதிராக நடிகைகள் குரல் கொடுப்பது வெட்கக்கேடான செயல் என நடிகை கங்கனா ரனாவத் கடுமையாக சாடியுள்ளார்.

அமெரிக்காவில் மின்னியாபொலிஸ் நகரில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவர் வெள்ளை இன போலீஸ் அதிகாரிகள் பிடியில் கடந்த மாதம் 25-ம் தேதி கொல்லப்பட்ட சம்பவம் அங்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இனவெறியால் நடந்த இந்த படுகொலையை பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, தமன்னா, திஷா பதானி, சோனம் கபூர் உள்ளிட்ட பலர் கண்டித்தனர். இவர்கள் சிவப்பழகை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முன்னணி பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் அவர்களை கடுமையாக சாடி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்திய நடிகர்-நடிகைகள் பலர் சிவப்பழகை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடிக்கின்றனர். ஆனால் இப்போது வெட்கம் இல்லாமல் கறுப்பினத்தவர்களுக்கு எதிராக நடக்கும் இனவெறியை கண்டித்து குரல் கொடுக்கிறார்கள். இவர்களுக்கு என்ன துணிச்சல் பாருங்கள். 

சிவப்பழகு விளம்பர நிறுவனங்களுடன் கோடிக்கணக்கில் பேசி ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்கள். இதை பற்றி யாரும் ஏன் கேட்பது இல்லை. இங்கு இனவெறி வேரூன்றி உள்ளது. சாதாரண ஒரு கதாபாத்திரத்துக்கு கூட கறுப்பான தோற்றம் கொண்டவரை நடிக்க வைக்க மறுத்து விடுகின்றனர். நான் எந்த முக அழகு விளம்பரத்திலும் ஒப்பந்தமாகவில்லை. எனது சகோதரி மாநிறம். முகஅழகு விளம்பரத்தில் நடித்தால் அவரை அவமானப்படுத்துவது போல் ஆகிவிடும். இவ்வாறு கங்கனா கூறினார். 

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »