Press "Enter" to skip to content

கணவருக்கு முடி வெட்டி அழகு பார்த்த பிரபல நடிகை… மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் ஒருவர் தன்னுடைய கணவருக்கு தானே முடிவெட்டி அழகு பார்த்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் சலூன் கடைகள் திறக்கப்படாததால் பலர் முடி வெட்ட முடியாமல் தவித்தனர். தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்பட்டு சலூன் கடைகள் திறக்கப்பட்டபோதிலும் கொரோனா வைரஸ் பயம் காரணமாக பலர் சலூன் கடைகளுக்கு செல்வது இல்லை.

 
இந்த நிலையில் பொதுமக்கள் மட்டுமின்றி பிரபலங்களும் கூட தங்களது தலைமுடியை தாங்களே வெட்டிக் கொண்டும் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு முடிவெட்டி விடும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஒருவர் தனது கணவருக்கு முடி வெட்டி விட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

பிரபல பாலிவுட் நடிகையும், ஐபிஎல் பஞ்சாப் அணியின் உரிமையாளருமான நடிகை பிரீத்தி ஜிந்தா தனது கணவருக்கு தானே முடிவெட்டி உள்ளார். மிகவும் நேர்த்தியாக தனது கணவருக்கு தான் முடி வெட்டிவிட்டதாகவும் தற்போது அவரை பார்ப்பதற்கு மிகவும் புத்துணர்ச்சியாக இருப்பதாகவும் பிரீத்தி ஜிந்தா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். 

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »