Press "Enter" to skip to content

ரம்யா கிருஷ்ணன் காரில் மதுக்குவளைகள் பறிமுதல்

நடிகை ரம்யா கிருஷ்ணன் சென்ற காரில் நூற்றுக்கணக்கான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் சென்னையைத் தவிர்த்து பிற பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிலர் சென்னையைத் தாண்டிச் சென்று மதுபாட்டில்கள் வாங்கி வருவதைத் தடுக்க சோதனைச் சாவடிகளில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

 இந்நிலையில் கிழக்கு கடற்கரைச்சாலையில் முட்டுக்காட்டில் உள்ள சோதனைச் சாவடியில் வாகனசோதனை செய்துக் கொண்டிருந்த கானத்தூர் போலீசார், அங்கு வந்த காரை மறித்து, சோதனை செய்தனர்.

 அப்போது அந்த காரில் நடிகை ரம்யா கிருஷ்ணன், அவரது சகோதரி வினயா கிருஷ்ணன் ஆகியோர் இருந்துள்ளனர். 

சோதனையில் அந்த காரில் 96 பீர் பாட்டில்கள், 8 மதுப்பாட்டில்கள் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அந்த கார் டிரைவரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் டிரைவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »