Press "Enter" to skip to content

அமீர்கான் வீட்டில் நுழைந்த கொரோனா

பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை தொடர்ந்து நடிகர் அமீர்கான் வீட்டில் கொரோனா நுழைந்து இருக்கிறது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்நோய் தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் இல்லத்தில் பணியாற்றிய ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அமீர்கானின் பணியாளர்களுக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

 

இது குறித்து அமீர் கான் தனது ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், என்னுடைய பணியாளர்களில் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்கள். மும்பை மாநகராட்சி அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

 எங்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என முடிவுகள் வந்துள்ளன. இப்போது எனது தாயாருக்கு பரிசோதனை மேற்கொள்ள இருக்கிறேன். அவருக்கும் நெகட்டிவ் முடிவு வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »