Press "Enter" to skip to content

அல்லு அர்ஜூன் படத்தில் இருந்து விலகியது ஏன்? – விஜய் சேதுபதி விளக்கம்

அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா படத்தில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து நடிகர் விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜூன் அடுத்ததாக நடிக்கும் படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாக உள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க உள்ளார். 

இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அவர் இப்படத்தில் இருந்து திடீரென விலகினார். இதற்கான காரணம் வெளியிடப்படாமல் இருந்தது.

இந்நிலையில், கால்ஷீட் பிரச்சனை காரணமாக புஷ்பா படத்தில் இருந்து விலகியதாக நடிகர் விஜய் சேதுபதி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் புஷ்பா படத்தின் கதை தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »