Press "Enter" to skip to content

மாநாடு படத்தை ஒருபோதும் கைவிட மாட்டேன் – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி திட்டவட்டம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை ஒருபோதும் கைவிடமாட்டேன் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷன் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக இதன் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.

இந்நிலையில், ஆங்கில செய்தித்தாள் ஒன்றில் வெங்கட் பிரபுவின் பேட்டி ஒன்று வெளியாகியிருந்தது. அதில்  “அரசியல் கூட்டங்களை வைத்து மாநாடு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. நிறைய காட்சிகளுக்கு கூட்டம் தேவைப்படும். படப்பிடிப்புக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அரசு விலக்கினாலும் 70 முதல் 80 பேர் மட்டுமே படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டால் மாநாடு போன்ற ஒரு படத்தின் ஷூட்டிங்கை எப்படி நடத்த முடியும்? அதே படக்குழுவினருடன் இணைந்து வேறொன்றைப் படமாக்க ஆலோசித்து வருகிறோம்” என்று கூறியிருந்தார். அந்தச் செய்திக்கு மாநாடு கைவிடப்பட்டதா? என்று தலைப்பிட்டிருந்தனர்.

இந்தச் செய்தியை குறிப்பிட்டு மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:   “மீண்டும் இதுபோல் செய்திகள் வந்தால், நான் சம்பந்தப்பட்ட பத்திரிக்கை நிறுவனத்தை சும்மா விடமாட்டேன். எப்போதும் எனக்கு ஊடகத்துறையினர் மீது மரியாதை உள்ளது. மாநாடு படம் கைவிடப்பட்டதாக நான் எந்த விஷயமும் சொல்லவில்லை. தயாரிப்பாளரின் கருத்தை கேட்காமல், எப்படி இதுபோன்ற உண்மையில்லாத செய்திகளை வெளியிடலாம்? மாநாடு ஒருபோதும் கைவிடப்பட மாட்டாது” என கடுமையாக பதிவிட்டுள்ளார். 

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »