Press "Enter" to skip to content

பூஜையுடன் தொடங்கியது சுந்தர் சி-யின் அடுத்த படம்

இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பண்முகத்திறமை கொண்ட சுந்தர் சி, தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை இன்று தொடங்கி உள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் சுந்தர் சி. குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவரான சுந்தர் சி, படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் இவர் தயாரித்த மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. சுந்தர் சி அடுத்ததாக மறுதயாரிப்பு படத்தை தயாரிக்க உள்ளார். 

கன்னட மொழியில் சூப்பர் ஹிட்டான ‘மாயாபஜார் 2016’ படத்தின் தமிழ் மறுதயாரிப்பு சுந்தர் சி தயாரிக்கிறார். இந்த படத்தை அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பத்ரி என்பவர் இயக்க உள்ளார். இதில் பிரசன்னா, ஷியாம், யோகி பாபு, அஸ்வின், ஸ்ருதி உள்பட பலர் நடிக்க உள்ளனர். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. இந்த பூஜையில் சுந்தர் சி, நடிகர் பிரசன்னா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த படத்திற்கு சத்யா இசையமைக்கிறார்  

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »