Press "Enter" to skip to content

நள்ளிரவில் புதிய அறிவிப்பை வெளியிடும் மிஷ்கின்

தமிழ் திரைப்படத்தில் முன்னணி இயக்குனராக இருக்கும் மிஷ்கின் நள்ளிரவில் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட இருக்கிறார்.

தமிழ் திரைப்படத்தில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மிஷ்கின். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு சைக்கோ திரைப்படம் வெளியானது. 

இவர் இயக்கிவந்த துப்பறிவாளன் 2 திரைப்படம் விஷாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்திலிருந்து விலகினார். 

இந்த நிலையில் மிஷ்கின் இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருந்தது. குறிப்பாக சிம்பு நடிக்கும் படத்தை அவர் இயக்கவிருப்பதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில் தற்போது தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை செப்டம்பர் 20ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அறிவிக்க உள்ளதாக மிஷ்கின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »