Press "Enter" to skip to content

சமுத்திரக்கனிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ராஜமவுலி

ஆர்.ஆர்.ஆர் எனும் பிரம்மாண்ட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள சமுத்திரக்கனிக்கு, அப்படத்தின் இயக்குனர் ராஜமவுலி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பாகுபலி படத்தின் இயக்குனர், ராஜமவுலியின் இயக்கத்தில், சிறிய வேடத்தில் நடித்தாலே போதும் என்று நடிகர் – நடிகையர் நினைப்பர். இந்நிலையில், அவரது, ஆர்ஆர்ஆர் படத்தில் நடிப்பதற்கு, ‘சம்பளமே வேண்டாம்…’ என்று சொல்லி தான் ஒப்பந்தமானார், சமுத்திரகனி. 

ஆனால், முதல் நாள் படப்பிடிப்புக்கு சென்றபோது, சமுத்திரகனியே நினைத்துப் பார்க்காத அளவுக்கு, ஒரு பெரிய சம்பளத்தைக் கொடுத்து இன்ப அதிர்ச்சியடைய வைத்துள்ளார், ராஜமவுலி.

அதையடுத்து, ‘இதுவரை கிடைக்காத அரிய வாய்ப்பு மட்டுமின்றி, இதுவரை வாங்காத சம்பளமும் இந்த படத்தில் எனக்கு கிடைத்துள்ளது…’ என்று, மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார், சமுத்திரகனி.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »