Press "Enter" to skip to content

பூஜையுடன் தொடங்கியது ‘திரிஷ்யம் 2’ படப்பிடிப்பு

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிக்க உள்ள திரிஷ்யம் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் திரிஷ்யம். பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை கொலை செய்த மகளை காப்பாற்ற போராடும் தந்தை பற்றிய கதை. ரூ.5 கோடி செலவில் உருவான இந்த படம் ரூ.75 கோடி வசூல் குவித்தது.

இதன் வெற்றி இந்தியா முழுவதும் அனைத்து மொழி திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது. திரிஷ்யம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் மறுதயாரிப்பு செய்யப்பட்டது. இதில் கமல்ஹாசன், கவுதமி ஆகியோர் நடித்தனர். இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் சீன மொழிகளிலும் மறுதயாரிப்பு செய்யப்பட்டது.

தற்போது 7 வருடங்களுக்கு பிறகு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை ஜீத்து ஜோசப் இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதிலும் மோகன்லாலே கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனா நடிக்கிறார். இதில் கலந்து கொள்வதற்காக மோகன்லால், மீனா உள்ளிட்ட படக்குழுவினர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »