Press "Enter" to skip to content

நானும் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டேன் – கஸ்தூரி பகீர் குற்றச்சாட்டு

திரையுலகில் தனக்கு பாலியல் துன்புறுத்தல் நேர்ந்ததாக நடிகை கஸ்தூரி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் புகார் கூறினார். ஆனால் அனுராக் கஷ்யப் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை கஸ்தூரி, “அனுராக் காஷ்யப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை பாயல் கோஷ் குற்றம் சாட்டியுள்ளார். சட்டத்தின் படி, உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் நிரூபிக்க இயலாது. ஆனால் இதில் சம்பந்தப்பட்ட பெயர்களில் ஒருவர் அல்லது அனைனைவரின் பெயரையும் அழிக்கக்கூடும். எதுவும் நல்லதல்ல” என பதிவிட்டிருந்தார்.

கஸ்தூரியின் இந்த பதிவிற்கு இணையப் பயனாளர் ஒருவர் “இதுவே உங்களுக்கு நெருக்கமான ஒருவருக்கு நடந்திருந்தால், இப்படித்தான் சட்டம் பேசுவீங்களா?” என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த கஸ்தூரி, “எனக்கு நெருக்கமானவர் என்ன. அது எனக்கே நடந்திருக்கிறது. மூடிய கதவுகளுக்கு பின்னால். அது அப்படியே தான் இருக்கிறது” என கூறியிருந்தார். திரையுலகில் தனக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்திருப்பதாக கஸ்தூரி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »