பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து அவரது நண்பரும், இயக்குனருமான பாரதிராஜா பேட்டி அளித்துள்ளார்.
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதை அறிந்து அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க நண்பரும், இயக்குனருமான பாரதிராஜா இன்று மருத்துவமனைக்கு வந்தார்.
எஸ்.பி.பி உடல்நிலை குறித்து இயக்குனர் பாரதிராஜா கூறியதாவது: எஸ்.பி.பி எனது 50 ஆண்டு கால நண்பன். இன்னும் நம்பிக்கை இருக்கிறது. உலகம் முழுவதும் பலகோடி பேர் பிரார்த்தனை செய்தும் பயனில்லை. துக்கம், வருத்தத்தில் இருக்கும்போதோ, சில சூழ்நிலைகளிலோ வார்த்தைகள் வராது என அவர் கூறியபோது கண்கலங்கினார்
Related Tags :
Source: Malai Malar