Press "Enter" to skip to content

பிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் பருவம் 4 நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் நிவர் புயல் தாக்குதலை அடுத்து சென்னையின் அனைத்து பகுதிகளிலும் அடைமழை (கனமழை) பெய்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று இரவு நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் சென்னையின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான செட் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்து விட்டதும் இந்த ஸ்டூடியோ முழுவதுமே வெள்ளத்தால் சூழ்ந்துவிட்டதாகவும், பிக்பாஸ் வீட்டில் கூட தண்ணீர் புகுந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் போட்டியாளர்கள் அனைவரையும் பாதுகாப்பாக பூந்தமல்லியில் உள்ள விண்மீன் ஹோட்டலில் நேற்று இரவு தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது மழை நின்று விட்டதை அடுத்து வெள்ள நீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 இன்று இரவுக்குள் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் வீட்டிற்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை தண்ணீரை வெளியேற்ற கால தாமதம் ஆனால் நாளைய நிகழ்ச்சியில் பழைய காட்சிகள் ஒளிபரப்பப்படும் என்று கூறப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »