Press "Enter" to skip to content

என் தந்தையின் அந்த ஆசை கடைசிவரை நிறைவேறவில்லை – இயக்குனர் சிவா உருக்கம்

இயக்குனர் சிவா, மறைந்த தன் தந்தையின் ஆசை நிறைவேறாமல் போனது குறித்து சமீபத்திய பேட்டியில் உருக்கமாக கூறி உள்ளார்.

தமிழ் திரைப்படத்தில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சிவா. சிறுத்தை படம் மூலம் அறிமுகமானவர் அஜித்தை வைத்து வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். தற்போது ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார். 

இயக்குனர் சிவாவின் தந்தை ஜெயக்குமார் கடந்த 27-ந் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் பல்வேறு ஆவணப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் சிவா தன் தந்தை பற்றி சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: என் தந்தையின் இழப்பை தாங்கிக் கொள்வது கடினமாக உள்ளது. அவரின் இழப்பால் மிகுந்த கவலையில் இருக்கிறேன். அவர் 30 வருடங்களாக தன் துறையில் வெற்றிகரமாக இருந்தார். அவர் பல ஆவணப்படங்களை இயக்கி உள்ளார். ஒரு கமர்ஷியல் படமாவது இயக்க வேண்டும் என்பது தான் என் தந்தையின் நீண்ட நாள் ஆசை. ஆனால் நேரம் இல்லாததால் கடைசி வரை அவரது ஆசை நிறைவேறவே இல்லை என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »