Press "Enter" to skip to content

மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்று வருபவருக்கு உதவிய விஷால்

மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்றுவந்த அகத்தீஸ்வரம் ஒன்றிய செயலாளருக்கு விஷால் தன்னுடைய அறக்கட்டளை மூலமாக மருத்துவ உதவி தொகையை வழங்கியுள்ளார்.

தமிழ் திரைப்படத்தில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவரது நடிப்பில் தற்போது சக்ரா திரைப்படம் உருவாகி உள்ளது.

இவர் தன்னுடைய தேவி அறக்கட்டளை மூலமாக ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

அந்த வகையில் கரூர் மாவட்டம் நடிகர் சங்க உறுப்பினர் ராமசாமி அவர்களின் மருத்துவ உதவிக்காக விஷால் அவர்கள் தனது தேவி அறக்கட்டளை சார்பில் கரூர் மாவட்ட மக்கள் நல இயக்கத்தின் தலைவர் ராஜேஷ் அவர்கள் உதவி தொகையை வழங்கியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஓன்றிய இளைஞரணி மக்கள் நல இயக்கத்தின் தலைவர் வீரமணி அவர்கள் சமீபத்தில் மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு விஷால் தனது தேவி அறக்கட்டளை சார்பில் மருத்துவ உதவி தொகையை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் நல இயக்கத்தின் தலைவர் அசோக் குமார் அவர்கள் வழங்கியுள்ளார். நிதியுதவி பெற்ற இருவரும் நடிகர் விஷாலுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »